Category: 10 நிமிட உரைகள்

b110

முதல் நட்பு

முதல் நட்பு உறவு என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கு எந்த உறவு இருக்கிறதோ இல்லையோ நட்பு என்ற உறவு அனைவருக்கும் இருக்கும். இது ஒரு வித்தியாசமான உறவு. நம் மீது ஒரு வித அன்பு வைத்துப் பழகி, நம் இன்ப துன்பங்களை பங்கிட்டுக் கொள்ளும். இளமை முதல் முதுமை வரை பல கோணங்களில் இந்த நட்பு வரும். இந்த நட்பின் மூலம் பல உதவிகள் பெற்று முன்னேறியவர்கள் பலர். பொதுவாக தாய் தந்தை, அண்ணன் தம்பி, […]

அழைப்புப் பணி செய்வோம்!

அழைப்புப் பணியே அழகிய பணி! وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? (அல்குர்ஆன்: 41:33) அழைப்புப் பணியை, சிறப்பு மிக்க பணி என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ […]

பிறரின் மானமும், கண்ணியமும் புனிதமானது

பிறரின் மானமும், கண்ணியமும் புனிதமானது அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! வட்டி, விபச்சாரம், கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் மிக பாரதூரமானவை என்று விளங்கியுள்ள இந்த முஸ்லிம் சமுதாயம், பிறருடைய மானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்வதை பார்க்கிறோம். ஆனால் அது மறுமையில் மிகப் […]

தூதரை நேசிக்காதவரை…

தூதரை நேசிக்காதவரை… கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் எனும் பாக்கியத்தை நமக்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக, எனது உரையை ஆரம்பம் செய்கிறேன். உயிரினும் மேலான உத்தம நபி ஓர் இறை நம்பிக்கையாளர் எனப்படுபவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருக்க வேண்டிய உறவு சாதாரண தொண்டன், தன்னுடைய அரசியல் கட்சித் தலைவர் மீது கொண்டிருக்கும் உறவைப் போன்றதல்ல! அவனது தாய், தந்தையர், மனைவி மக்கள் மற்றும் உலக மக்களில் யார் மீது கொண்டிருக்கும் […]

வாள் அல்ல மன்னிப்பே ஆயுதம்

வாள் அல்ல மன்னிப்பே ஆயுதம் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அன்று. மாறாக, இஸ்லாத்தின் பகுத்தறிப்பூர்வமான கடவுள் கொள்கை, மனிதர்கள் அனைவரும் சமம், மதகுரு என்ற ஒன்று இல்லாமை என மாற்றுமத மக்களும் ஒப்புக் கொள்ளும் பல்வேறு சிறப்பம்சங்களின் காரணமாகவே இஸ்லாம் அபார வளர்ச்சியடைந்தது, இன்றைக்கும் வளர்ச்சி அடைகிறது . நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாம் தாறுமாறாக பரவியதற்கு மிக முக்கிய காரணம், அவர்களிடத்தில் இருந்த […]

தவறுகளுக்காக இஸ்திஃக்ஃபார் தேடுவோம்!

தவறுகளுக்காக (இஸ்திஃக்ஃபார்) பாவமன்னிப்பு தேடுவோம்! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஸலாத்தும், ஸலாமும் நபி (ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! ஒவ்வொரு நாளும் பாவத்திலேயே மூழ்கி இருக்கும் நாம் மறுமையில் இதன் காரணத்தால் நாசமடைந்து விடுவோம் என்ற அச்சம் இன்றி வாழ்ந்து வருகிறோம். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்பட்டது என்பதற்காக […]

சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகள்

சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகள் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இறைவனை நம்பிக்கை கொண்டு விட்டால் மாத்திரம் போதாது. நற்செயல்களை போட்டி போட்டு செய்வதன் மூலமும் தான் சுவனத்திற்குள் இலகுவாக நுழைய முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் பல்வேறு சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகளை இஸ்லாம் வைத்துள்ளது. உதாரணமாக, நல்ல வார்த்தைகளைப் பேசுதல் தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய […]

மீஸான் தராசை நிரப்புவோம்!

மீஸான் தராசை நிரப்புவோம்! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவனின் அருள் மழையின் காரணமாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். மறுமை நாளில் நாம் ஒவ்வொருவரும் நன்மை தீமையின் எடைகளுக்கு தகுந்தவாறு தான் சுவனமோ, நரகமோ […]

சத்தியத்தை உரக்கச் சொல்வோம்!

சத்தியத்தை உரக்கச் சொல்வோம்! அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக வருபவர்களுடன் போர் புரிவது மட்டுமே ஜிஹாத் என்று பெரும்பாலான மக்கள் விளங்கி இருப்பதனால் தான் ஆளாளுக்கு வாள் ஏந்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் வாள் ஏந்துவதை ஜிஹாத் என்று குறிப்பிடுவதைப் போல நியாயத்திற்காக நாவினால் குரல் கொடுத்தலும் ஜிஹாத் என்றே கூறுகிறது. أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ […]

மென்மையாக எடுத்துரைப்போம்!

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும். சக கொள்கைவாதிக்கு, மனிதனுக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால், இன்றைக்கு தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் என்ற பெயரில், தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. தவறுகளை […]

தொழுகையை சரிப்படுத்துவோம்!

தொழுகையை சரிப்படுத்துவோம்! கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! முதல் கேள்வியே தொழுகை தான். இறைவன் நம் மீது கடமையாக்கி இருக்கிற அமல்களில் மிகமிக முக்கியமான ஒரு அமல் தொழுகை. இந்த கடமையில் நாம் அனைவரும் நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இந்த நேரம். ஏனெனில், அல்லாஹ், இறந்தவர்கள் அனைவரையும் […]

சத்தியத்தை சொல்ல முனைந்தால்….

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! சத்திய இஸ்லாமை நாம் பிறருக்கு எடுத்துச் சொல்ல முனைந்தால், பல்வேறு சோதனைகளை சந்திக்க நேரிடும். சமுதாயத்தில் தலைவர்களாக இருப்பவர்கள், செல்வாக்கு படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் தான் முதலில் நம்மை எதிர்ப்பார்கள். وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا […]

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இஸ்லாம் மிகவும் எளிமையான மார்க்கமாகும். அகில உலக அருள்பாலிப்பவன், படைப்பினங்களின் இரட்சகன் அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும். அது அல்குர்ஆனையும் அதன் விளக்கவுரையாக அமைந்த அல்லாஹ்வின் திருத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றையும் நெறிமுறையாகக் கொண்டு செயல்படுத்தும் மார்க்கமாகும். “நான் கடவுளை வழிபாடு செய்கிறேன்; ஆராதனை செய்கிறேன்” என்று ஒரு மனிதன் தன் விருப்பப்படி எதையும் செய்திட முடியாது. அதைப் போன்றே மார்க்கம் சொல்லும் காரியத்தையே ஒரு மனிதன் […]

இஸ்லாத்தை அழிக்க இயலாது

இஸ்லாத்தை அழிக்க இயலாது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! இன்றைக்கு உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமே ஏராளமான சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன. முஸ்லிம்கள் மட்டுமே குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். எனினும், அல்லாஹ் இஸ்லாம் எனும் இந்த ஜோதியை ஒருக்காலும் யாராலும் அழிக்க முடியாது என்று சூளுரைக்கிறான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு பூமியைச் சுருட்டிக் காண்பித்தான். அதில் சூரியன் உதிக்குமிடங்களையும் அது மறையுமிடங்களையும் கண்டேன். என்னிடம் சுருட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதிகளை எனது சமுதாயத்தின் […]

« Previous Page